ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label சுயம். Show all posts
Showing posts with label சுயம். Show all posts

Monday, April 1, 2013

அன்பிற்கு இவன் அடிமை..! - அகர வரிசைக் கவிதை


மோகத்தின் முதற்பிள்ளை
மோகனின் மூன்றாம் பிள்ளை
அன்பினில் அன்றில் பறவை
ஆசையில் அன்னப் பறவை..!

ன்பிற்கு இவன் அடிமை
க்கத்தில் நிகழ்த்துவான் புதுமை
அனைத்தையும் அறிந்து கொள்ள
ஆசைப்படும் இவன் இளமை

வனொன்றும் செய்யாமலே
டற்ற தென்றல்கள் இவனைத் தீண்டும்
இவன் வாசம் பெற ஏங்கும்
ஈரிதழும் பெருமூச்செறிந்து தூங்கும்..!

ண்மையில் ஒன்றுமில்லாதவனெனினும்
க்கத்தை நிறைத்து வைப்பான்
உலகம் உய்ய உழைத்திருப்பான்
ஊடல் பல செய்து வைப்பான்

ளிமை வாழ்க்கை விரும்புமிவன்
ழை பெற்ற எளிய மகன்
என்னையும் நேசிக்கும்
ஏந்திழையே நான் செய்த பேறென்ன

யம் பட்டு நிற்கிறேன் - அன்பே என்
ஐயத்தை நீக்குவாய்... உன்னருகாமைக்கு
ம்புலனும் ஏங்குவதேன்
ஐயகோ என்று அலறுவதேன்...

ன்றாய் வாழ நினைக்கிறேன்
வியமே பதிலைச் சொல்...
ஒன்றிணைவது எப்போது? - நாம்
ஓடி விளையாடுவது எப்போது?

வை சொன்ன மொழி கேட்டால்
ஔடதமாய் இனிக்குதடி..
க்கறையே நான் இக்கரையில்
ஃதே அன்பே நானென்ன செய்ய...?

(என் கவிதை ஓர் தமிழ் விரும்பி. தமிழ் குறும்பி... அவளுக்கென அகர வரிசையில் எனை வைத்து அவளுக்காக வரைந்த கவிதை இது...)




Wednesday, April 6, 2011

போரட்டம் மிகுந்த உலகத்தில்..!


அன்னையின் கருவினில்
ஆலம் வித்தாகி
பூமியின் மடியினில்
ஆலமரமாகி
நின்று நிழல் தர போராடுகின்றேன்..!

அன்னையின் வயிற்றினில்
அடர்ந்த இருட்டினில்
கண்மூடி வாழப் பழகியதால்
அகிலத்து இருட்டினில்
கண் திறந்து வாழப் போராடுகின்றேன்..!

அன்னையின் மடியினில்
தவழ்ந்த போது
வறுமையும் என்னை வளர்த்தது...
என்னுடன் அதுவும் வளர்ந்ததால்
வறுமையைப் போக்க போராடுகின்றேன்..!

அன்னையின் வளர்ப்பினில்
அன்பைக் கண்டு
தந்தையின் வளர்ப்பினில்
அகிலத்தைக் கண்டு
அறிவனாய் வாழ போராடுகின்றேன்

போரட்டம் மிகுந்த உலகத்தில்
போராட நீயும் வா என்று
என் தாயும் என்னை
பிறப்புவித்தாள்..!
அவளிச்சைப்படியே பிறந்தேனின்று..!

எங்கும் எதிலும் வென்று விட
போட்டி, பொறாமைகளை தகர்த்து விட
எனைப் பெற்ற எந்தன் பெற்றோர்களே
எனக்கு எல்லா வரங்களையும் அளித்தருளும்
உம் பாதங்களில் எனக்கும் இடமருளும்..!




Tuesday, April 6, 2010

பத்துத் திங்கள் எனைச் சுமந்து..!

திருமதி. வள்ளி மோகன்ராஜி. திரு. வீ. மோகன் ராஜி

மோகனத்தின் முதல் விந்தையே
உம்முயிரிள் ஓருயிரை
எனக்கீந்த எம்மன்புத் தந்தையே...
நின் திருத்தாழடி சரணம்..!

வள்ளி மணவாளரின்
வண்டமிழ்ச் சதியே...
பத்துத் திங்கள் பாங்காய்
எனைச் சுமந்து
பத்திரமாய் பெற்றெடுத்தாயே..!
உன் திருவடி சரணம்..!

உறவற்ற இவ்வுலகில்
உருக்கொடுத்து...
உயிர்க்கொடுத்து...
நல்லுடலையும் கொடுத்தாயே..!
நின் மலரடி சரணம்..!

அன்னைக் கிணையாக
அன்பு காட்டி...
அறிவைப் புகன்று...
உம் மகன்ற மார்பில்
எனைச் சுமந்த எந்தையே...
தங்களின் எழிலடி சரணம்..!

உங்களைப் போலொரு
உத்தமத் தம்பதிகளின் ஒரு
மகவாய் பிறந்ததென் பாக்கியம்...
எனை ஆளாக்க நீங்கள்
பட்ட துன்பங்கள் அனைத்தும்
என் கண்ணில் நீர்க்குளம்..!

எம்மைப் படைத்த
என் பிரம்மாக்களே...
என்றுமுங்கள் மகவாய்ப்
பிறக்கும்படியான
வரமொன்றை அருளுங்கள்..!
எனைப் பிறப்புவித்த இந்நாளில்
மட்டுமன்றி...
எந்நாளுமெனைக் காத்தருளுங்கள்..!

ஆண்டுகள் இருபத்தியொன்பதானாலும்
என்றுமுங்கள் நனி மகவே நான்..!
இதே நாளில் உங்களின்
பொன் மடியில்
நான் முதன் முதலாய்
துஞ்சியதைப் போல்...
இன்றும் துஞ்ச வேண்டுமென்ற
எண்ணமென் மனதில்
தோன்றுகிறது எந்தைகளே..!

பணி நிமித்தம் காரணமாய்
தங்களைப் பிரிந்து வாழ்ந்தாலும்
என்றுமுங்கள் ஆசிகளுடனே
நடை பயின்றுக் கொண்டிருக்கிறேன்
என் வாழ்க்கையில்..!
எந்தைகளே எனை வாழ்த்தியருளுங்கள்..!