ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Monday, November 16, 2015

மழை தேவையில்லை..?



குளிரூட்டி இன்றி
ஊரெங்குமுள்ள
ஏழைகளின் வீடுகளில்
ஏசி காற்றை
வீசிச் செல்கிறது
இந்த பருவமழை..!
மின்சாரத் தேவையில்லை
அறைகளை மூடத் தேவையில்லை!

ஊரெங்கும் நிறுவப்பட்டிருக்கும்
உத்தமர் சிலைகளுக்கு
உள்ளூர கொண்டாட்டம்
கடும் மழையில் குளித்தும்
கரையாமல்
கம்பீரமாய் நிற்கிறோமென்று…
நீரிங்கு வீணில்லை..!
காக்கை எச்சங்கள் நிலைப்பதில்லை!

பூமிப்பெண்ணிற்கு
மனிதன் ஏற்படுத்திய
மாசுகளை
பெருமழை எனும் பெயரால்
வானமகன் வாரி வீசி
கழுவுகின்றான்…
சோப்பு இங்கு தேவையில்லை
துவட்டத் துண்டு தேவையில்லை!

தண்ணியின்றி தவிக்கும்
தாவரங்களுக்கு
தாங்காத மகிழ்ச்சி..!
நீர் குடிக்க
ஆழ வேர் பரப்பி
மண்ணோடு உறவாடுகின்றன..!
வான்மழை தன்னை
வாஞ்சையோடு தழுவுகின்றன!
செயற்கை உரம் தேவையில்லை
செயற்கை நீர் தேவையில்லை..!

ஆனால் -
ஏரி குளங்களை
ஆக்கிரமிக்கும் ஜந்துகளுக்கும்
பிளாஸ்டிக் குப்பைகளை
உருவாக்கும் மாக்களுக்கும்
பெருமழை தேவையில்லை
அடைமழை தேவையில்லை
அழிவினை செய்யும்
அரக்கர்களுக்கு எதுவுமே தேவையில்லை…

தேவையில்லை என்பதால்தான்
எல்லாவற்றையும்
அழித்தெடுத்துச் செல்கிறது
அடைமழையால் உருவான பெருவெள்ளம்!
புரட்டி எடுத்துச் செல்கிறது
பெரும் புயல் வெள்ளம்!
மூழ்க வைத்துக் கொள்கிறது
சிறு மழைத்துளிகளால்
உருவான மா வெள்ளம்…
இயற்கையை நேசி…
அதுவே நம்மை காப்பாற்றும்..!




Saturday, December 10, 2011

மழையினை ரசிக்கும்..!



எனை விடுத்து...
மழையினை ரசிக்கும்
என் மதி மலரே..!

மழை முகம் கண்டதும்...
உன் புன்னகையை மேகத்திடம்
காட்ட சென்றாயோ..?

உன் புன்னகை கண்டு
பூரித்த மழை மேகமோ
கண்ணை மின்னலாய் சிமிட்டியதோ..?

உன் கார் கூந்தலைக் கண்டு
பொறாமை கொண்ட வானமகள்
தன் மேகக் கூந்தலை மென்மேலும்
கருமையாக்கியாக்கினாளோ..?

இவை எதையும் நானறியேன்...
வான் நிலவை மறைத்த மேகம்
மழையாய்ப் பொழிவது போல்...
என் நிலவை குடையால்
மறைத்து காதலைப் பொழிவேனடி..!




Saturday, April 23, 2011

கோடை மழையின் சாரல் மழை..!


கொளுத்தும் வெயிலில்
கோடை மழையின்
சாரல் மழை
சரம் சரமாக வழிய...
அம்மழைச்சரங்கள்
பூமித்தாயின் உடலெங்கும்
முத்த மழை பொழிய
அவளோ புளங்காகித்தில்
மூச்சு விட்டாள்..!
நம் நாசியில் அவள்
மண் மணம் பரவ
நம் அனைவரின் உடலெங்கும்
புத்துணர்ச்சி பரவ...
நம் இதழ் நமையறியாமல்
புன்னகை பூக்கும்..!
கிராமத்து மண் மணத்தில்
கிறுகிறுத்துப் போகாதோர் யார்?
அவ்வாசனையை பாழும்
சென்னையில் எதிர்பார்த்தேன்
கிடைத்த்தென்னவோ
தார் சிமெண்டின் நாற்றமும்
நகரத்து குப்பைகளின் நாற்றமும்தான்..!