ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Monday, April 14, 2014

அன்பும் அறனும்..! - திருமண வாழ்த்து கவிதை


ன்பும் அறனும் உடையதுதான் இல்வாழ்க்கை
     என்றுணர்ந்து இன்று நீ இவ்வாழ்வில் இணைகின்றாய்!
ருசிகரமானதா? பசிகரமானதா இந்த இல்வாழ்க்கை
    என்பதை சோதித்து சாதனை படைக்கப் போகின்றாய்!
ணானல் போல் வளைந்து கொடுத்து வாழப் பழகி
    பரணியுடன் நீ உன் தரணியை ஆளப்போகின்றாய்!
ச்சமூகத்தில் இன்று மூதல் நீயும் ஓர் அங்கமாகி
    அனைவருக்கும் நிகரான குடும்பத் தலைவனாகின்றாய்!
ந்ததி தழைக்க வேண்டி சந்தோஷம் பெருக வேண்டி
   இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டில், தாலி கட்டப் போகின்றாய்!
ட்சலட்சமாய் கொட்டிக் கொடுத்தாலும் கொடுக்க முடியா
   சந்தோஷ நல் வாழ்க்கைதனை இனி நீ வாழப் போகின்றாய்!
ம்மாநிலத்தில் என்றென்றும் மனமொத்த தம்பதிகளாய்
   வாழையடி வாழையாய் வாழ்கவென்று வாழ்த்துகின்றேன்!


னி படர்ந்த ரோஜாவின் மென்மை குணம் கொண்டு
  பிறந்த குலத்தின் பெருமையைப் போற்றி, வளரும் குலத்தின்
த்தினமாய் என்றும் நீ ஜொலிக்க வேண்டும் பெண்மணியே!
  இல்வாழ்வில் விட்டுக் கொடுத்து வாழப்பழகு கண்மணியே..!
ணிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களும்
   எங்களோடிணைந்து வாழ்த்துகிறது நீவீர் வாழ்க வாழ்கவே!

மணமகன்: து. அருணாச்சலம்
மணமகள்: நா. பரணி

மணநாள்: 14.04.2014
மண இடம்: இளவரசி திருமண மண்டபம், சீலப்பந்தல், திருவண்ணாமலை

(இன்று எனது அலுவலக நண்பருக்கு திருமணம். அவருக்காக நானெழுதிய திருமண வாழ்த்துக் கவிதை இது..! கவிதையின் முதல் வரிகளிலுள்ள தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... இல்வாழ்வில் இணையவிருக்கும் இதயங்களின் இயற்பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?

உங்களனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!)




Wednesday, January 29, 2014

நான்... அவன்..!


நான் நிஜம் எனில்
அவன் நிழல்!
அவன் நிஜம் எனில்
நான் நிழல்!
எண்ணம் நான் எனில்
செயல் அவன்!
எண்ணம் அவன் எனில்
செயல் நான்!
இதற்குப் பெயர்தான் நட்பு!

(என்னையும், என் வாழ்வின் மிகமுக்கியமான தருணங்களையும் வழிநடத்திச் செல்வதில் எனக்கு உறுதுணையாக இருந்த, இருந்து கொண்டிருக்கிற, இருக்கப் போகிற எனது நட்புகளுக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து நட்புகளுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...)




Friday, December 13, 2013

முத்தாரக் கவியெடுத்து..! - பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை



முத்துத் தமிழெடுத்து முத்தாரக் கவியெடுத்து
உன் மாமன் வருகிறேன் பிறந்தநாள் வாழ்த்துப் பாட
குயிலாய் குரல் கொடுக்கும் குழவியாயிருந்த நீ
இன்றோடோராண்டை எட்டுகிறாய் மருமகனே- உனக்காக
ந்திர லோக சபையை நான் கூட்டட்டுமா..!
மாமன் முதுகிலேற்றி உலகைக் காட்டட்டுமா..!
ங்க நண்பனுக்கு தப்பாமல் நீ பிறந்தாய்..!
தங்க மகனென்று போற்றிடவே நீ வளர்வாய்..!
ன்று மட்டுமன்று என்னாளும் ஊருலகம் உனைப்
போற்றும்படி வாழ்வாங்கு வாழ்கவென் மருமகவே!
*********************************************************************************
 (எனது ஆருயிர் நண்பனும், எனக்கு தோள் கொடுக்கும் தோழனுமான வ.நவநீதகிருஷ்ணனின் மகனாகிய எனது மருமகனுக்கு இன்று முதல் பிறந்தநாள். அவனுக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை. பிறந்தநாள் கொண்டாடும் எனது மருமகனின் பெயர் தெரியவிரும்பினால் கவிதை வரிகளில் தடித்த எழுத்துக்களில் இருப்பவற்றை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... குதுகலமாய் உங்கள் நாவில் உலா வருவான் என் மருமகன்...)
************************************************************************************************** 

நானெழுதிய புதிய சிறுகதை
: என்னப் பெத்தவரு




Monday, August 19, 2013

மறவேன் இனி..!


நான்காண்டு காலம்
ஒன்றாய்ப் பழகி
ஒன்றாய்த் திரிந்து
ஒன்றாய் மகிழ்ந்து
ஒன்றாய்க் குலாவிய நட்பினை
நிஜத்தில் பின் தொடர்ந்தேன்...
பள்ளிக்காலம் முடிந்த பின்
எங்களைப் பிரிக்க முடியாமல்
பிரித்தது காலம்…
எனை தனிப் பித்தனாக்கியது
அக்கோலம்?
எத்திசையில் இருப்பினும்
நட்பின் வாசம் தேடி
நாயாய் நான்
பல்லாண்டுகளாய் அலைந்த போது
இன்றுதான் அவனை
நிழலாய் பின்தொடரும்
வாய்ப்பு கிடைத்தது
முகநூலிலும்
சிட்டுக்குருவியின் கீச்சலிலும்…
இந்நாளை மறவேன் இனி…
அதற்கு காரணம் இரண்டு!
நான் தொலைத்த நான்காண்டு நட்பு
பல்லாண்டுகளுக்குப் பிறகு
இன்று ஐந்தாமாண்டில்
அடியெடுத்து வைப்பது ஒன்று...
என் கவிக்குடிலுக்கு இன்றோடு
அகவை ஐந்தென்பது மற்றொன்று..!




Tuesday, March 6, 2012

வற்றாத அன்பொன்றே..! - என் ஆருயிர் நண்பனுக்கு திருமண வாழ்த்து கவிதை


என் ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணனனுக்கு மார்ச் 5, 2012 அன்று திருமணம் நடைபெற்றது... இவன், என் பள்ளிப் பருவ நண்பன்... என் வாழ்வில் என்னோடு தோள் கொடுத்து வரும் நண்பன்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த திருமண வாழ்த்துக் கவி இதோ...



நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் நவநீ என்கிற நவநீத கிருஷ்ணன்...

என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!

(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! இல் வாழ்க்கையில் இணைந்துள்ள, வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)




Wednesday, March 30, 2011

‘நட்பு’ எனும் பூ..! - நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை


இப்பூவுலகில் பூக்கும்
பூக்களெல்லாம்
ஒருநாளில் வாடிவிடும்..!
ஆனால் ‘நட்பு’ எனும் பூ
என்றென்றும் வாடாமல் வாசம் தரும்
என்பதை எனக்கு உணர்த்திய
உன்னத நண்பன் நீ..!

நான் வேலை தேடியலைந்த போதெல்லாம்
என் வேதனையைத் துடைத்து...
நான் நம்பிக்கையிழக்கும் போதெல்லாம்
என்னுள் நம்பிக்கையை அடைத்து...
பாழும் நகரத்தில் பரிதவித்து நின்ற போதெல்லாம்
பதறாதே நானிருக்கிறேன் என்று
பரிவோடு நம்பிக்கை மொழி நவின்றவின் நீ..!

என் சுமையினை சுமப்பதற்கு
உன்னிரு தோள்களைக் கொடுத்து...
அடியற்ற மரம் போல
அதலத்தில் வீழும் போதெல்லாம்
பிரதிபலன் பாராமல்
விழுதாய் தாங்கிப் பிடித்தவன் நீ..!

‘இடுக்கண் களைவதாம் நட்பு’
என்ற வள்ளுவனின் வாக்கிற்கு
இலக்கணம் கற்பித்து
என்னுடைய கர்ணன் என
கனிவாய் நிரூபித்தவன் நீ..!

துன்பநிலை வருகையில்தான்
தூய நட்பு வெளியில் வரும்
என்பதை அறியச் செய்த
அன்பு நிறை நண்பா...
இன்றுனக்கு பிறந்த நாள்..!
இனிமை பொங்கும் வளநாள்...
உனைப் பெற்றதால்
உன் பெற்றோர்க்கு மட்டுமல்ல
உனை நண்பனாகப்
பெற்ற எனக்கும் பெருமகிழ்ச்சியே...

எந்நாளும் உனைத் தேடி
வசந்தங்கள் வந்து விழ...
மகிழ்ச்சிக் கடலலை உன்
வாழ்வில் பொங்கியெழ...
என்றென்றும் வாழ்க நீ நட்பே...
பல்லாண்டு... பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு வாழ்கவே..!

(என் இனிய நண்பன் அ. பிரேம் சந்திரனுக்கு இன்று பிறந்த நாள்... அவனுக்காக நானெழுதிய பிறந்த நாள் கவிதை..!)