ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 7, 2009

உன் வாசலில் தவம்..!


மார்கழிக் குளிரில்
சூரிய விடியலில்
நீர் தெளித்து
கோலமிட்டுச் செல்லும்
உன்னழகைக் காணவே
எண்ணற்ற கனவுகளோடு
உன் வாசலில் தவமிருக்கிறேன்..!
பூசணிப் பூவாய்..!




Tuesday, October 6, 2009

கடிதமெழுத முயற்சிக்கிறேன்..!


உனக்கு கடிதம் எழுதலாமென்று
எவ்வளவோ
முயற்சித்துப் பார்த்தேன்…
ஊஹும்…
அத்தனையும்
கவிதையாய்த்தான்
வருகிறது..!



கர்வப்பட்ட அன்னப்பறவை..!


இது நாள் வரை
தன் நடைதான்
அழகு நடையென
கர்வப் பட்டுக் கொண்டிருந்த
அன்னப் பறவை..!
உன் அழகு நடையைக்
கண்டதும்
அடங்கி விட்டதடி..! 



Monday, October 5, 2009

தாஜ்மஹால்


இரு பறவைகளின்
இல்லற இன்பத்தில்
ஒரு பறவை இறந்துவிட...
மறு பறவை கட்டிய
வெண் பளிங்கு
வெள்ளைக் கூடு..!



Thursday, October 1, 2009

மதுமிதாவிற்கு வாழ்த்து..!

காலட்ச் மியுமுனைப் பெறவே - அவளிடத்
துஞ்சினாய் தூயவளே… கவிணேசக்  கவித்துவா
மின் மகளே சத்தியத்தின் வழி நிற்கும்
தானாதிபதியாய்  நூறாண்டு நீ வாழி..!


(எங்களது தோழியின் மகளான மதுமிதாவிற்கு இன்று 4வது பிறந்தநாள்... அச்சிறுமிக்காக நான் எழுதிய மரபுக்கவிதை (முயற்சி)... இதில் எதுகை, மோனை இருக்காது. ஆனால், சீர்கள் வெண்பாவிற்குரிய இலக்கணத்துடன் இருக்கும்...

இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலுள்ள முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்தால்... பிறந்தாநாள் கொண்டாடும் சிறுமியின் பெயர் வரும்... இச்சிறுமியின் தாயின் பெயரை, இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலுள்ள இரண்டாவது எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இச்சிறுமியின் தந்தையார் பெயரான கணேசனுடைய பெயரும் இதில் அடங்கி இருக்கும்.

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்...)


கா மேரு பருவதமடா உன்றன் தாய்
துஞ்சினாய் அவள் வயிற்றில் மழலையாய்…
மிசல் கணக்கனின் கணக்குப்படி – பத்துத் திங்கள்
தானாகத் தனித்திருந்தாய்க் கருவறையில்..!

பிறப்பெடுத்தாய் பெண் மலராய் இப்புவியிலி
வாத நிலை பெறுவாய் என்கவியில்..!
ந்தியத் திருநாட்டில்  நீ ஒரு பூங்காற்று..!
மிழின் தலைமகளே நீ எங்கள் தாலாட்டு..!
நாமகளே… நீ பிறந்த இந்நாளில் என்றும் நலமேவ
ள்ளி மகன் வாழ்த்துகிறான்… வாழ்க நீ பன்னூறாண்டு..!

(அதே போன்றதுதான்..ஆனால் கொஞ்சம் வித்தியாசம்...)





விதவை..!?


--*--*--*--*--*--*--*--
பிறருக்கு வெளிச்சம்
கொடுப்பதற்காக
தன்னையே அழித்துக் கொள்ளும்
மெழுகுவர்த்தி..!

--*--*--*--*--*--*--*--