ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, June 9, 2010

என்னழகே உன்னழகை ...!

செங்காந்தள் மலரெடுத்து
உன் கருங்கூந்தலில் சூடி விட்டு...
செஞ்சாந்துப் பொட்டெடுத்து
உன் பிறை நெற்றியில் திலகமிட்டு...
வெண்காஞ்சிப் பட்டெடுத்து
உன் பொன்னுடலில் கட்டி விட்டு...
பொன் தாலிதனை யெடுத்து
உன் வெண்சங்குக் கழுத்தில் கட்டி விட்டு...
உனைப் பார்க்கிறேன்...
செங்கதிரோன் மறையும் வேளையில்
வெள்ளி நிலவு எழுவது போல்
என் முன்னே நிற்கின்றாய்...
என்னழகே உன்னழகை
என்னென்று சொல்வேன்...
ஏதென்று சொல்வேன்..!



Tuesday, June 8, 2010

உன் கண்ணோடு உறவாடும்...


கண்ணாடி அணிந்த உன்
முகத்தைப் பார்த்தேன்..!
நிலவிற்கு கண்ணாடியா
என அதிசயித்துப் போனேன்..!
அடி என் அமுதழகே..!
அழகான என் கண்ணழகே..!
உன் கண்ணாடியாகவேனும்
நான் இருந்திருக்கக் கூடாதா..?
தினமும் உன்னோடு இருப்பது மட்டுமின்றி
உன் கண்ணோடு உறவாடும்
பாக்கியமாவது கிட்டியிருக்குமே..!
நான் என்ன செய்வேன்...
நான் என்ன செய்வேன்..?

(என்னவளுக்கு திடீரென கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் வர, அவள் அணிந்து கொண்டு என் முன்னே வந்தாள்...  அப்போது அவளுக்காக நானெழுதிய கவிதை..!)



Friday, June 4, 2010

கவி நேசனின் கவிமகனே..! - பிறந்த நாள் கவிதை..!

மையவளின் இளைய மகனே..!
உற்சாகத்தின் இருப்பிடமே..!
வி நேசனின் கவிமகனே..!
கவி நிலவாய் சிரிப்பவனே..!

கிலமாளப் பிறந்தவனே...
அன்பிறகினிய திருமகனே...
கிள்ளை மொழி பேசிப் பேசி...
கிட்டா இன்பம் தந்தவனே...
ட்சம் பொன் கொடுத்தாலும்
தமிழ் மகவே உனக்கிணையில்லை?.
ன்றோடு நீ பிறந்து ஆண்டிரண்டு
ஆயிற்று... மனமகிழ்ச்சியும் கூடிற்று..!

பிறப்பால் எமை மகிழ்வித்தது போல்
உன்னுடைய நற்செயலாலி
வாப் புகழடைந்து...
உன் தாயை மகிழ்விப்பது மட்டுமின்றி
ந்தியாவையே மகிழ்விப்பாயடா..!
இதேசத்தில் நீ பிறந்தமைக்கு நல்
டமொன்றை பதிப்பாயடா..!
அதில் நல்லோரை சேர்ப்பாயடா..!
நானிலம் போற்றும் படி
நனி மகவே நீ வாழ - நல்லு
ள்ளங்கள் வாழ்த்துகிறது..!
இன்று போலெனெறும் வாழ்க..!

(எனது இளைய மகனுக்கு  இரண்டாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! தடித்த எழுத்துக்களை மேலிருந்து கீழாக படித்துப் பாருங்கள்... என் மகனின் பெயர் கிடைக்கும்)




Thursday, June 3, 2010

என்றென்றும் ரசிகன்..!

கொடியிடை ஆட்டி…
நடை உடை மாற்றி…
ஊர் முன்னே ஆடுவதுதான்
நடனமென்பது
அக்காலம் பெண்ணே..!
இந்தப் போலியான
நாகரீக உலகிலும்…
எனக்குப் பிடித்தாற்ப் போல்
எளிமையாய் உடையணிந்து…
அமைதியாய்
எனை நோக்கி நடந்து வருகையில்
இதுதான் உண்மையான...
நளினமான...
நடனமென்பேன்..!
இதற்கு நான் என்றென்றும்
ரசிகனென்பேன்..!     



Wednesday, June 2, 2010

உன் நிழல் போலத்தான்..!


நீ நடந்தால்...
உன்னுடனேயே நடக்கும்..!
நீ சிரித்தால்...
உன்னுடனேயே சிரிக்கும்..!
நீ அழுதால்...
உன்னுடனேயே அழும்..!
உன் நிழல் போலத்தான் அன்பே...
என்னுடைய காதலும்..!   



Tuesday, June 1, 2010

நீ உதிர்க்கும் புன்னகை போல...!

ஒற்றையாய் நிற்கும்
அந்த ரோஜா மலர்..!
கொட்டும் உறை பனியில்
விடிய விடிய நனைந்த படி
இருந்தாலும்...
அதிகாலையில்
கதிரவனைக் கண்டதும்
அம்மலர் புன்னகைத்தபடியே
உற்சாகமாய்ப் பூ பூக்கும்...
எனைப் பார்த்ததும்
உன் முகம் மகிழ்ச்சியில் பூத்தபடி
நீ உதிர்க்கும் புன்னகை போல...!