ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, October 21, 2013

நீ ஒரு கொலைகாரி..!


என் உள்ளத்தை
கொள்ளையடித்த
கொள்ளைக்காரி என்றுதான்
உன்னை நினைத்திருந்தேன்!
என் உறக்கத்தை
கொலை செய்தபோதுதான்
நீ ஒரு கொலைகாரி
என்பதை கண்டுகொண்டேன்!
என்னை கொள்ளையடித்தது
மட்டுமின்றி
எனக்காக கொலையும்
செய்த காரணத்தால்
என் இதயச் சிறையில்
உனக்கு ஆயுள் தண்டனை
விதிக்கிறேனடி!




Friday, October 18, 2013

இரவினைத் தூங்க வைத்து!


இரவினைத் தூங்க வைத்து
இமைகளை விழிக்க வைத்தாய்!
கனவினைத் தூங்க வைத்து
கண்களை திறக்க வைத்தாய்!
நிலவினை தூங்க வைத்து
உன் நிலா முகம் காண வைத்தாய்!
நட்சத்திரங்களை தூங்க வைத்து
நமட்டுச் சிரிப்பை சிதற வைத்தாய்!
கருமேகங்களை தூங்க வைத்து
கவிதையை கிறுக்க வைத்தாய்!
என் துன்பத்தை தூங்க வைத்து
இன்பத்தை நுகர வைத்தாய்!
இத்தனையும் தூங்க வைத்தவளே
எப்போது எனை உன்
இதயத்தில் தூங்க வைப்பாய்?




Tuesday, October 15, 2013

உன் விரல் தொட்டு...



என் மடிக்கணினிக்கு
உன் விரல் தொட்டு
உயிர் கொடுத்தாய் என்பதற்காக
இன்றுவரை
அதன் இயக்கத்தை
நிறுத்தாமலேயே இருக்கிறேன்!




Saturday, October 12, 2013

அழகிற்கே இலக்கணம்!


பேச்சு மொழிக்கு இலக்கணம்
கற்றுத் தேர்ந்த நான்
உன் மௌன மொழிக்கு
இலக்கணம் தெரியாமல் திண்டாடுகிறேன்!
கம்பீர நடை பயின்று
தேர்ந்த நான்
உன் தளிர் நடையில்
தடுமாறுகிறேன்!
முல்லைக் கொடியின் அசைவில்
முறுவல் பூக்கும் நான்
உன் கொடி இடை அசைவில்
மூர்ச்சையாகிப் போகிறேன்!
கருநாகமே வந்தாலும்
அதை மயக்கும் திறன் கொண்ட நான்
உன் கருநாகக் கூந்தலில்
மயங்கிப் போகிறேன்!
சிட்டுக்குருவிகளின்
சிருங்காரப் பேச்சில் சிலாகித்த நான்
உன் சிக்கனப் பேச்சில்
சித்தம் சிதறிப் போகிறேன்!
கூடல் நகரில் பிறந்து
மாநகரையே மயக்கும்
சங்கத் தமிழே..!
சங்கீதத் தமிழே..!
உனைக் கண்ட பின்புதான்
அழகிற்கே இலக்கணம்
எதுவென்பதை அறிந்து கொண்டேன்!
அதன்படி ரசிக்கவும் கற்றுக் கொண்டேன்!




Tuesday, September 24, 2013

இதயத்திற்கு நல்லது!


சாப்பிட உட்கார்ந்தேன்
என்னவள் பரிமாறினாள்
வழக்கத்திற்கு மாறாக
தயிர் சாதம் பரிமாறினாள்
புருவத்தை கேள்விக்கணையாக்கினேன்
கேள்வியைப் புரிந்து கொண்டவள்
'தயிரை சேர்த்துக் கொண்டால்
இதய நோய் வராதாம்...
ஆதலால் தயிரை
சேர்த்துக் கொள்ளுங்கள்'
என்றாள் வாஞ்சையாக...
மெல்லச் சிரித்து
மெல்லியாளிடம்
'எனக்கிது தேவையில்லை
என்னிடம் இதயமே இல்லை' என்றேன்
'உங்கள் இதயம்
உங்களிடம் இல்லை என்பது
எனக்குத் தெரியும்!
என் இதயம் உங்களிடத்திலிருக்கிறதே
ஆதலால்தான் சொன்னேன்
அதிகம் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றாள்!




Monday, September 16, 2013

பிறைநிலவே உன்னழகில்..! - பிறந்தநாள் வாழ்த்து


பிறைநிலவே உன்னழகில் பெரும் பித்தானோம்
       வளர்நிலவே உன்னுயிரில் குறும் வித்தானோம்!
சிப்பதெனில் உன் குறும்பைத் தவிர வேறேதுமில்லை
      ருசிப்பததெனில் உன் அரும்பு மொழிக்கு நிகரேதுமில்லை!
திரும்பும் திசையெல்லாம் தீங்கரும்பே நீயானாய்
      எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் சேயானாய்!
க்குவலயத்தில் இன்றோடு நீ பிறந்து ஆண்டொன்று
     இந்நாளை கொண்டாடி மகிழ்கின்றோம் என்றும் நன்றென்று!
ஷாஸ்திரம் பாராமல் சம்பிரதாயம் பாராமல் பாரதியின்
      புதுமைப் பெண்ணாய் என்றென்றும் நீ வாழ்க வாழ்கவே!


(எனது தோழியின் மகளுக்கு இன்று முதலாமாண்டு பிறந்தநாள்... அந்த அன்பு செல்லத்திற்கு என் பாசம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! அந்த குட்டி செல்லத்திற்காக நானெழுதிய கவிதை இங்கே... அந்த குட்டி செல்லத்தின் பெயரை, இக் கவிதையில் தடித்த எழுத்துக்களில், மேலிருந்து கீழாக அமைத்து எழுதியிருக்கிறேன்...)