ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, October 30, 2009

நூறு மில்லி..!



மறந்தும் கூட பெரிய வார்த்தை
பேசாத அப்பா..!
அன்புடன் அரவணைப்பதில்
அன்னைக்கு
நிகரான தந்தை..!
கேட்டவுடன் அள்ளித் தருவதில்
புராண காலக் கர்ணனை விஞ்சிய
நிகழ்கால வள்ளல்..!
அப்பப்பா... என் அப்பாவிடம்
எவ்வளவு நற்குணங்கள்..!
அத்தனையும் தவிடு பொடியானது
அவரடித்த நூறு மில்லியால்..!



Thursday, October 29, 2009

குறுங்கவிதைகள்: கல்வி..!




இன்றைய கல்வி

சரஸ்வதியைக் காண
லட்சுமியைத்
தேட வேண்டியிருக்கிறது..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

பள்ளி

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி..!
பெயர் மட்டும்
'ஔவையார் அகாடமி'

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*



Wednesday, October 28, 2009

உலகின் மிகச் சிறந்த சிற்பிகள்..!



இந்த உலகின்
மிகச்சிறந்த
சிற்பிகள் யார்..?
என்று போட்டி வைத்தால்
முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்
பெண்ணே..!



Tuesday, October 27, 2009

நீரின்றி..!

நீரின்றி மீன்கள்
வாழுமா பெண்ணே..?
வாழமுடியாதடா என்றாய்
பிறகெப்படி..?
நீரே இல்லாமல்
உன் கண்களுக்குள்
இரண்டு கெண்டை மீன்கள்
துள்ளி விளையாடுகின்றன..?



(இது என்னுடைய 50-வது பதிவு... இந்நேரத்தில் என் தாய், தந்தைக்கும், தாய்த்தமிழுக்கும், அன்பு நண்பர்களுக்கும், எனை எழுதத் தூண்டிய என்னவளுக்கும் எனது நன்றிகள் சமர்ப்பணம்..)




Monday, October 26, 2009

எனக்கும் தேனீக்கும் சண்டை..?




உன்னால்...
எனக்கும் தேனீக்கும்
சண்டை பெண்ணே...
நீ சிந்துவது
புன்னகையா..?
தேனா என்று..?



Friday, October 23, 2009

உதைக்க வருவதேன் பெண்ணே..!




உண்மையைச் சொன்னால்
உதைக்க வருவதேன் பெண்ணே..?
உன் முகம் அழகிய ரோஜா என்றேன்..!
சீச்சீ... என் முகமெல்லாம்
முகப்பருக்கள்..?
ஏனடா ரோஜா என பொய் சொல்கிறாய்
என்றபடி எனை அடிக்க வருகிறாய்..!
அட அசடே...
முள்ளில்லாத ரோஜா ஏது..?