ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, July 5, 2012

என்னோடு சேராமல்..!



இப்பிறவியில்
என்னோடு சேராமல்
போனதால்
மறுபிறவியாலாவது
என்னை கரம்பிடிப்பாயாவென்று
என் கன்னியவள் கேட்டாள்…
கேட்டதும் என் கண்ணில்
அருவி வழியச் சொன்னேன்...
இங்கே இருப்பது வெறும்
உடல் கூடுதான்...
அப்படி ஒன்று இருந்தால்
அது உன்னோடுதான்…
இல்லையேல்
நான் என்றும் புதைக்கப்பட்ட
மண்மேடுதான்…
நம் காதல் என்றென்றும்
கலந்திருக்கும்
விண்ணோடுதான்..!
______________________________________


(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்:விடமாட்டேன் உன்னை..!: திகில் தொடர்கதை - 9)







8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !

சசிகலா said...

நம் காதல் என்றென்றும்
கலந்திருக்கும்
விண்ணோடுதான்..!

காதல் வரிகள் அழகு.

RPSINGH said...

superb

Unknown said...

அடுத்தப் பிறவி என்று
ஒன்று இருந்தால்
அது இரண்டாம் பிறவியாய்
இருக்கட்டும் !
இன்னும் ஆறு பிறவிகளும்
இனி உன்னோடு தொடரட்டும் !

மோகனன் said...

வணக்கம் தனபாலரே...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

மோகனன் said...

வாங்க சசிகலா...

தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

மோகனன் said...

வணக்கம் ரஜினிபிரதாப்...

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

மோகனன் said...

பிறவிகளில் நம்பிக்கையற்றவன் நான்...

அப்படி ஒன்று கிட்டினால் அது என் பாக்கியமே...