ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, July 4, 2013

காதலாகிக் கசிந்துருகி..! - இளவரசன் மரணம்


காதலாகிக் கசிந்துருகி
கண்ணீர் மல்கி
கன்னியினைக்
கரம் பிடிக்க முயன்றான்
காளையவன்
இளவரசன்
கன்னியும் அவனைக்
கைப்பிடிக்க
முன் வந்தாள்..!

காதல் மனங்கள்
சதிபதியாய்
இணையத் தடை
வந்தது
சாதி எனும்
எமன் வடிவில்..!
எதுவரினும் இருவரும்
சமர் புரிவோமென
புரட்சித் திருமணத்தினை
தாமாகவே செய்து கொண்டனர்

இருமனம் இணைந்தது
குற்றமெனக் கருதி
சாதி வெறிபிடித்த
ஓநாய்கள் ஓலமிடவே
கன்னியின் தந்தை
தன்னையே
கொலை செய்துகொண்டார்
அப்போது வெடித்தது கலவரம்
எளியோரின் கிராமத்தில்
நீண்டது
வன்முறைக் கரம்
சாதித் தீ மூண்டதால்
அக் கிரமாம்
அக்கிரமக்காரர்களால்
ஆனது தீக்கிரை...

சாதீய ஓநாய்கள்
தொடர் ஊளையிடவே
அங்கு காட்சிகள் மாறின
சாதீயக் கட்சிகள்
அறிக்கையில் ஊறின
மிரட்டும் பாணியில்
ஓலம் ஊதின
கன்னியின் அன்னை
அழுது புலம்ப
அன்னை மடிதேடி
அவளும் கிளம்ப
அவனோ வெட்டி விடப்பட்ட
மொட்டை மரமானான்
தனித்து விடப்பட்ட
பாலை நிலமானான்

மனம் தளரா விக்கிரமாதித்தன் போல்
நீதிகேட்டு போராடினான்
நீதிமன்றத்திற்கு
வந்த கன்னியோ
வாழவிருப்பமில்லை அவனோடு
வாழ்வேன் இனி நான்
அன்னையோடு என்றாள்!
அத்தகைய முடிவு
அன்னை மேலுள்ள பாசமா
சாதி வெறிபிடித்த
நாய்களின் கோபாவேசமா?
அவனால் பிரித்தறியமுடியவில்லை

கரம் பிடித்தவள்
மனம் மாறுவாள்
மண வாழ்க்கை ஏறுவாள்
என நினைத்தவன்
எண்ணத்தில்
மண் விழுந்தது
மனம் துவண்டது
என்ன நினைத்தானோ
ஏது நினைத்தானோ
காலமொன்றே அறியும்
கன்னியின் பேச்சால்
காயம்பட்டவன்
தன்னையே மாய்த்துக் கொண்டான்
தன்னுயிரை நீத்துக் கொண்டான்
என ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன
சில கொலை என கூறுகின்றன
ஒரு காதல் மணம்தான்
இரு உயிர்களின் நீக்கத்திற்கு
காரணமென்று
யாரேனும் சொன்னால்
அவர்களை .....ஆல் அடிக்க வேண்டும்

இவைகள்
தற்கொலை அல்ல
சாதீய எண்ணங் கொண்ட
ஓநாய்கள்
செய்த கொலைகள் அன்றோ?
இத்தரங்கெட்ட நாய்களை
தண்டிப்பவர் யார்?
இச்சாதி வெறிபிடித்த நாய்களை
கொன்றழிப்பவர் யார்?
கேள்விகள் கிளை விட்டு முளைக்கின்றன
பதில் தருவார் யாரோ..?

மகள்தானே மணம் கொண்டாள்
மகிழ்ந்திருப்போம்
என கன்னியின்
தந்தையும் நினைக்கவில்லை
கணவன்தான் போய்விட்டார்
மகளேனும் வாழட்டும்
என அவளன்னையும்
நினைக்கவில்லை
கரம் பிடித்தவனோடு
வாழ்ந்து பின் அன்னையை
சமாதானம் செய்வோம்
என அவளும் நினைக்க வில்லை
எத்தனை துயர் வரினும்
துஞ்சாமல் கைப்பிடிப்போன்
என அவனும் நினைக்கவில்லை
போங்கடாங்க நீங்களும்
உங்க கல்யாணமும்..!

இப்படியே ஒவ்வொருவரும்
செய்து மாண்டால்
நம் நாட்டில்
சாதீயம் இருக்கும்
சமுதாயம் இருக்காது
சாதிவெறி இருக்கும்
சமத்துவம் இருக்காது
ஏற்றத்தாழ்வு இருக்கும்
ஒற்றுமை இருக்காது
போங்கடாங்க நீங்களும்
உங்க கேடுகெட்ட சமுதாயமும்..!

(கவிதை எழுதி கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. இத்தனை நாட்களாக எழுதத் தோன்ற இயலா அளவிற்கு மோசமான சம்பவங்கள் என் வாழ்வில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இன்று என்னை மட்டுமின்றி ஒட்டு மொத்த காதலர்களையே உலுக்கும் செய்தியாக இளவரசன் மரணம் அமைந்து விட்டது. நெஞ்சு பொறுக்கவில்லை... வார்த்தைகாளாக இங்கே கொட்டி விட்டேன். என்று மாறும் இந்த சமுதாயம்.

இளவரசா... பொறுத்திருந்திருக்கலாமே நீ... பொறுத்தவர்தானே பூமி ஆழ்வார்... ஆதலினால் காதல் செய்வீர் என்பதை, ஆதலினால் சாதல் செய்வீர் என்றாக்கி விட்டார்களே... உனது முடிவைக் கேட்டதிலிருந்து கண்ணீர் விம்முகிறது... 

சாதீய பலிக்கு உனது உயிரே கடைசியாக இருக்கட்டும்!

நிற்க மறுக்கும் கண்ணீருடன்

மோகனன்)




14 comments:

ராஜி said...

சாதீய பலிக்கு உனது உயிரே கடைசியாக இருக்கட்டும்!

Anonymous said...

சாதி வெறி பிடித்த தமிழ் சமூகத்தின் மற்றுமொரு துன்பியல் வடு, மனம் நோகின்றது. ஏண்டா இப்படி சாதி வெறிப் பிடித்த வாழ வேண்டியவர்களின் வாழ்வை சீரழிக்கின்றனரே !

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் வேதனையாக இருக்கிறது...

'பரிவை' சே.குமார் said...

நண்பா... மிகுந்த வேதனை அளிக்கிறது...

வே.நடனசபாபதி said...

நீங்கள் சொல்வதுபோல் இளவரசன் சிறிது காலம் பொறுத்திருந்திருக்கலாம். செய்தியை கேட்டதும் மனதை என்னவோ செய்தது. ‘சாதீய பலிக்கு உனது உயிரே கடைசியாக இருக்கட்டும்!’ என்ற உங்களின் வாக்கு பலிக்கட்டும்.

மோகனன் said...

அன்பு ராஜி...

பெண்களில் இருவகை...

ஒன்று நம்மை அழ வைத்து பார்ப்பவர்கள்

மற்றொன்று அவர்களும் (சு
நலமாய்)அழுது, நம்மையும் அழவைத்து ஏமாற்றி விட்டு விடுவார்கள்...

இதில் எந்த ரகம் இந்த சம்பவத்திற்கு காரணமென்பதை தாங்களே அறிந்து கொள்ளுங்கள்...

கொலை என்றும் தற்கொலை என்றும் தகவல்கள் பூதாகரமாகின்றன...

எது எப்படியாயினும்... ஒர் உயிர் பறிபோய் விட்ட மனத்தின் வலி மறைவதாயில்லை...

மோகனன் said...

நிரஞ்சன் தம்பி அவர்களே...

சாதீயம் இருக்கும் வரை வெறிபிடித்த ஓநாய்கள் இருக்கத்தான் செய்யும்...

சாதீயம் ஒழிப்போம்... சமத்துவம் இனியேனும் காப்போம்...

மோகனன் said...

எல்லோருக்கும் வேதனைதான் தனபாலரே....

வேதனைக்கு மருந்திடுவோர் யார்?

மோகனன் said...

கண்ணீர் கசிந்தது நண்பா...

மனம் நேற்றெல்லாம் குமுறியது...

இன்று இயல்பாகிவிட்டது...

இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் மறந்துவிடுகிறோம்...

எகிப்தைப் போல் இங்கும் இதற்கொரு புரட்சி வெடித்தால்... நிலை மாறுமோ..?

மோகனன் said...

வாக்கு பலிக்குமா என்பது காலத்தின் கையில்...

வசைமாறி பொழிந்த சாதீய நாய்களின் நாக்கு என்று தீயினில் கையோ..?

Anonymous said...



வேலை இல்லை ஆனா மது வேண்டும்.
திருமண வயது இல்லை ஆனா பொண்ணு வேணும்.
பணம் இல்லை ஆனா குடும்பம் நடத்தனும்.

இந்த ஐடியா நல்லா இருக்கே.

பள்ளி கூட மாணவர்களே ,

நன்றாக படித்தால்தான் வேலை கிடைக்கும் .
வேலை கிடைத்தால்தால் பொறுப்பு இருக்கும் ...
பொறுப்பாக பணம் சேர்த்தால் குடும்பம் இருக்கும் ...
குடும்பம் நன்றாக இருந்தால் சமுதாயம் நன்றாக இருக்கும் ...

ஆனா இதெல்லாம் எளிதல்ல .... அதுக்கு ...
ஒழுக்கமா இருக்கணும் ...
கட்டுபாடா இருக்கணும் ...

இப்போ ஒரு நல்ல ரூட் கிடைத்து இருக்கு ...

நோ படிப்பு
நோ வேலை
நோ வயசு வித்தியாசம்
நோ பொறுப்பு

எவனும் படிக்க வேணாம். பெண்களின் பின்னல் சுற்றுங்கள். ஒரு நாள் அந்த பெண் பலவீனமாக
இருக்கும் போது மடியும். அது போதும். அதுக்கப்புறம் ..... அதுக்கு பேர் காதல். இங்கே இணையத்தில் இருப்பவர்கள் வேலை
வாங்கி தருவார்கள். இல்லை அவர்கள் போடும் கமெண்ட்ஸ் வயிற்றை நிரப்பும்.

ஒன்லி காதல் ...

இதோ ... பஞ்ச் டயலாக்

பின்னல் சுத்து ...
விடாமல் துரத்து ...
இஸ்துகினு ஓடு ...

மோகனன் said...

அன்பு அனானி

காதல் வருவதற்கு படிப்பு, பணம், வேலை எதுவும் தேவையில்லை...

ஏன் இவையெல்லாம் இருந்தால்தான் காதல் செய்ய வேண்டுமா..?

இத்தனையும் இருந்தும் கூட, சாதிவெறியால் வீழ்த்தப்படுகிறார்களே..?

அதற்கு தங்களின் பதில் என்ன?

Anonymous said...

போங்கடா ! நீங்களும் உங்க 'காதலும்'
ஏன்டா லவ் பண்ணி வீனா போரிங்க

மோகனன் said...

காதல் என்பது ஓரறிவு ஜீவனிலிருந்து இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிலும் இருக்கிறது அனானி... அது உங்களிடமும் இருக்கிறது...

மறந்து விட்டு பேசாதீர்கள்...