சிந்தனை, செயல், வேகம் என அனைத்திலும்
பெண் சிங்கமென செயல்பட்ட மனமே எழுவாயோ?
வந்தனை பாடும் கூட்டத்தை எல்லாம் பந்தாடி
நிந்தனை கூட்டத்தை துரத்தியடித்த மனமே எழுவாயோ?
உன் குரல் கேட்டு ஒடுங்கிய சிறு நரிகளெல்லாம்
இன்று கூடி நின்று வேடிக்கை பார்க்கிறதே எழுவாயோ?
காவிரி, பெண் குழந்தை பாதுகாப்பு, இட ஒதுக்கீடு
என நீ செய்த நன்மைகள் ஒன்றல்ல இரண்டல்ல எனினும்
தமிழகம் நீ இருந்த போதே தள்ளாடிற்று – நீயின்றி
எப்படித் தள்ளாடுமோ என கவலையுறுறேன் குடிமகனாய்!
உன் மேல் எனக்கு ஆயிரம் வருத்தமிருப்பினும் - பெண்
இனத்தின் வழிகாட்டி என்பதில் பெருமை கொள்கிறேன்!
நிலவு முகம் கொண்ட உனைச் சுற்றி இருள் சூழுதே!
உலரும் வங்கக்கரை மண்ணுளுன் பொன்னுடல் மறையுதே!
துரோகங்களைத் தாங்கி துயரங்களைத் தாங்கி
தமிழகத்தினை வழிநடத்திய இரும்புத் தாரகையே
உண்மையில் நீ வானத்துத் தாரகையாகி விட்டாய் - உன்
துதி பாடி, கறை படிந்த கரங்கள் இனி இருளட்டும்
நீ கொண்டு வந்த நல்ல திட்டங்கள் உன் பேர் சொல்லட்டும்!
உன்னால் புனர்வாழ்வு பெற்ற ஏழைகள் உன் புகழ் பாடட்டும்!
தமிழகத்தின் தனிப்பெரும் இரும்பு பெண்மணியே
தாயே நின் ஆன்மா இயற்கையோடு இணையட்டும்!
No comments:
Post a Comment