ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, September 21, 2020

பிறந்தநாள் வாழ்த்து கவிதை வேண்டுமா?

 


இந்த பிறந்தநாள் வாழ்த்து கவிதை எனது அண்ணனுக்காக நான் எழுதியது... 

இந்த நிழற்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கவிதையின் வரிகளில் 1,3,5,7,9 ஆகிய வரிகளின் முதல் எழுத்துகளை மேலிருந்து கீழாகப் படித்தால்... பிறந்தநாள் கொண்டாடும் எனது அண்ணனின் பெயர் வரும்...

உங்களுக்கும், உங்களது அன்பில் நிறைந்தவர்களுக்கும் இதுபோன்று அவர்களது பெயரைக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கவிதை வேண்டுமென்றால்... தாராளமாக 9600045295 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்க... கவிதைக்கும்... வடிவமைப்புக்கும் கட்டணம் உண்டு...

இப்படி ஒரு வாழ்த்தினை உங்களின் அன்பானவர்களுக்கு கொடுக்க விரும்பினால் என்னை அணுகலாம்... சுயதொழில் செய்ய விரும்பும் எனக்கு இப்படியும் நீங்கள் எனக்கு பணி வழங்கலாம்...

மிக்க அன்புடன்

மோகனன்
moganan@gmail.com


எழுத்து வடிவில் இதே அந்தக் கவிதை

மோனத்தில் உழலும் இப்பூவுலகில் இந்நாள் ஓர்

மறவாத திருநாளனது நம்முடைய குடும்பத்திற்கு!

வேலும் மயிலும் துணையான வள்ளியம்மைக்கும்

வீரத்தின் வித்தான மோகன் ராஜிக்கும் பிறந்து

லுலுலுவாயென தாலாட்டுப் பாட வைத்தாய்!

தளிர் நடை பயின்று பெற்றோரை மகிழவைத்தாய்!

ளமளவென வளர்ந்து தச்சுப் பணியில் சிறந்து

குடும்பம் குழவியென சமூகத்தில் உயர்ந்தாய்!

ணிலவினைப்போல  உன் வாழ்வில் துன்பம் தேய்ந்து

நன்மைகள் வளர நீ பிறந்த இந்நாளில் வாழ்த்துகிறோம்!





No comments: