ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, September 9, 2011

ஆற்றலுடன் பிறந்தவனே..! - பிறந்தநாள் கவிதை


ஆற்றலுடன் பிறந்தவனே ஆதித்தா...
இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஆறு..!
ஊர் போற்றலுடன் வாழுகின்ற ஆதித்தா...
பேர் புகழோடு வாழ வேண்டும் ஆண்டு நூறு!

எமக்கு முதல் மகவாய் பிறந்ததினால்
என் வாழ்விற்கு அர்த்தம் தந்'தாய்'..!
உன் அன்பான அன்னையில் வாழ்விற்கு
தென்றல் போல் வசந்தம் தந்'தாய்'..!

உனக்கு துணையாய் அகிலத்தை கொடுத்தோம்
எமக்கு துணையாய் பொறுப்பைக் கொடுத்'தாய்'
உனக்கு உயிரும் உடலும் நாங்கள் தந்தோம்..!
எம்மிருவருக்கும் நீயே தந்தையும் தாயுமானாய்..!

இந்நாள் போல் எந்நாளும் உனக்கு மகிழ்ச்சி பொங்க
உலகின் குன்றாத கல்விச் செல்வம் உன்னோடு தங்க
உன் வளர்ச்சியில் எங்களுக்கு பெருமிதம் பொங்க...
நீ...  பன்நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவே..!




8 comments:

கலா said...

நீங்கள கவிதையாய்...வாழ்த்திய
அனைத்தையும்,
நான் என் உளமாற
வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கலா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Anonymous said...

happy birth day to aadhitha

sorry da ammu i dont forgot so many works sweet kiss to u......

viji mom..........!!!!!!!!!!!!!

Anonymous said...

ஆதித்தா...Ku yenudai piranthanal valthukal...

Rajarajeswari .R

Anonymous said...

Its Very Nice pa... Thank u..!

shanthi ganeshan

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு நன்றி விஜி அவர்களே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

முகமறியா விட்டாலும் முகமலர்ந்து
வாழ்த்தியமைக்கு நன்றி ராஜேஸ்வரி அவர்களே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

நன்றி சாந்தி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!