ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 20, 2015

காதலில் நாணயம்..?


"எனை நேசிப்பதில்
நாணயமாக
இருப்பாயா..?" என்று
என்னவள்
என்னிடம் கேட்டாள்..!

"அன்பு காட்டுவதில்
இருந்து
அரவணைப்பது வரை
எல்லாவற்றிலும்
நாணயமாய் இருப்பேனடி"
என்று அவள் தலையலடித்து
சத்தியம் செய்தேன்...

"உன்னால் அப்படி
நாணயமாக 
இருக்க முடியாது
சோதித்து பார்க்கலாமா..?"
என்று சவால் விட்டாள்!

"காதலில்
என் நாணயத்திற்கு
சோதனையா..?
சோதித்துப் பார்..!"
என்று எதிர் சவால்
விட்டேன்

"அப்படியா..?
அதையும் பார்க்கலாம்...
எங்கே எனக்கு
சத்தமில்லாமல்
ஒரு முத்தம் தா..!"
என்றாள்

தீராக் காதலால்
ஓராயிரம்
முத்தச் சந்தம்
தந்தேன்..!
எனையறியாமல்
நாணயம் இழந்து
நின்றேன்..!




3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மோகனன் said...

நன்றி தோழரே...

Mesa Livre said...

Thank you for writing and sharing this