ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, August 2, 2010

கண்டு பிடித்துக் கொடு..!

உன்னுடைய சீண்டல்கள்
என் நினைவுகளில்
நீங்கா இடம் பிடித்து விட்டன..!
உன்னுடைய காதல் பார்வைகள்
என்னுள் தணியாத தாகத்தை
ஏற்படுத்தி விட்டன..!
உன்னுடைய மெய்த் தீண்டல்கள்
என்னுள் மறையாத பரவசத்தை
பரப்பி விட்டன..!
இவைகளால்...
பொம்மையைத்
தொலைத்துவிட்டு நிற்கும்
குழந்தையைப் போல…
இரவில் தூக்கத்தைத்
தொலைத்து விட்டு நிற்கிறேனடி..!
என் தூக்கத்தை எனக்குக்
கண்டு பிடித்துக் கொடு..!



6 comments:

கலா said...

பொம்மையைத்
தொலைத்துவிட்டு நிற்கும்
குழந்தையைப் போல\\\\\\

நான் இரண்டு,மூன்று பொம்மைகள்
வாங்கிக் கொடுக்கின்றேன்
சமத்தாப் போய்த் தூங்குங்க....

Anonymous said...

policela complain kodukalame

மோகனன் said...

வாங்க கலா...

பெண்மைக்கு... பொம்மை ஈடாகாது..

வருகைக்கு நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

நன்றி தோழரே...

இன்னாமா ஐடியால்லாம் குடுக்குறீங்க...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Personality Care said...

all aare cho.., sweet...........

மோகனன் said...

நன்றி கார்த்திக்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!