ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, August 20, 2010

ஒத்துக் கொள்கிறேன்..!

எப்போதும்
சமூகத்தைப் பற்றியே
சிந்தித்துக் கொண்டிருந்த என்னை...
சதா சர்வ நேரமும்
உனைப் பற்றியே
சிந்திக்க வைத்து விட்டாய்..!
இதனால் என்னை
உன் காதலனாக்கினாயோ
இல்லையோ..?
உனைப் பற்றியே எழுதும்
காதல் கவிஞனாக்கி விட்டாய்..!
ஒத்துக் கொள்கிறேன்
கொள்கைப் பிடிப்போடு இருந்த
என்னைக்கூட
உன் கொள்ளை அழகால்
மாற்ற முடியும் என்பதை..!



6 comments:

லதானந்த் said...

அருமையான கவிதை. படிமங்கள் தொன்மங்கள் அனைத்தும் தித்திக்கின்றன. இவ்வளவு சூபர் கவிதையை இதுவரை நன் படித்ததேயில்லை

மோகனன் said...

வாருங்கள் தோழரே..!

இது வஞ்சகப்புகழ்ச்சி அணியில்லையே?

வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

பனித்துளி சங்கர் said...

கவிதை அருமை

மோகனன் said...

வாங்க தோழரே...

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை.

மோகனன் said...

வாங்க நண்பரே...

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!