ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, November 12, 2015

ஆனால் நமக்குத்தான்..?




தன்னில் மறுபாதி
இருண்டுவிடுமே
என்று நினைத்து
பூமித்தாய் என்றும்
சுழல்வதை நிறுத்துவதில்லை
விரைவில் விடிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்..!

தன்னுள் இருக்கும்
நீரெல்லாம் ஆவியாகுமே
என்று நினைத்து
கடலன்னை என்றும்
தன் ஆவியைக் கரைப்பதை
நிறுத்துவதில்லை
மழையாய் தன்னிடம்
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்!

தன் உடல், பொருள்
ஆவியெல்லாம்
குழவி எடுத்துக்கொள்ளுமே
என்று நினைத்து
நம் அன்னை நம்மை
வளர்த்தெடுப்பதை நிறுத்தவதில்லை
மானுடத்திற்கு நாம்
பயனுறுவோம் எனும் நம்பிக்கையால்…!

உலகிலுள்ள அனைத்து
அன்னைகளுக்கும்
என்றுமே நம் மீது
அசைக்க முடியா
நம்பிக்கைகளுண்டு…
ஆனால் நமக்குத்தான்..?




4 comments:

கும்மாச்சி said...

நித்திலமான உண்மை.

மோகனன் said...

மிகவும் நன்றி தோழரே...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள்வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மோகனன் said...

நன்றி ரூபன்...