ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, June 18, 2010

எரிமலையின் உள்ளே..! - காதல் குறுங்கவிதைகள்


எரிமலையின் உள்ளே
நான் எரிந்து கொண்டிருந்தாலும்
பெண்ணே..!
உன் காதல் பார்வை
பட்டால் போதும்…
பனியாய் நான் குளிர்ந்து போவேன்..!

**+**

கோவைப் பழ இதழுடையாள்…
கொஞ்சிப் பேசும் தமிழுடையாள்…
கொடியான இடையுடையாள்…
புள்ளிமான் நடையுடையாள்…
மோகனச் சிரிப்புடையாள்…
நீதான் என் காதலியாள்..!   

**+**


என் உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்தவளே…
என் கவிதைகளுக்கு
உயிர் கொடுத்தவளே…
இவைகளுக்கு  கொடுத்தது போல்
என் காதலுக்கு எப்போது
உயிர் கொடுக்கப்போகிறாய்..?
காத்திருக்கிறேன்..!   

**+**
காலன் என்னருகில்
வந்ததற்குக் கூட
கவலைப்படவில்லை அன்பே..!
காதலியான நீ இன்னும்
என்னருகில் வரவில்லையே
என்றுதான் கவலைப் படுகிறேன்..!

**+**

'நீரின்றி அமையாது உலகு' என்பது
வள்ளுவன் வாக்கு..!
'நீயின்றி அமையாது என் உலகு'
இது உன் காதலன் வாக்கு..!

**+**



1 comment:

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!