ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, April 18, 2011

என் பெண்ணிலவே..! - பிறந்த நாள் கவிதை!


இப்புவியில் அழகான
வெண்ணிலவின் பிறந்த நாள்
ஒவ்வொரு மாதமும் வரும்..!
ஆனால் சித்திரையில்
பிறக்கும் வெண்ணிலவுக்கோ
ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்தநாள் வரும்..!
அது போலே
அச்சித்திரையில் பிறந்த
(வி)சித்திர நிலவே..!
காதல் முத்திரையால்
என் நித்திரையை கொள்ளையிடப்
பிறந்த என் பெண்ணிலவே..!
நீ பிறந்த இந்நாளில்
உனைப் பெற்றோர்க்கு
மகிழ்ச்சியோ இல்லையோ..?
எனக்காக நீ பிறந்திருக்கிறாய்
என்பதைக் கண்டு
எல்லையிலா மகிழ்ச்சி கொள்கிறேன்..!
உனைக் கொஞ்சி மகிழ்கிறேன்..!
இனியவளே உனக்கிந்த
யாழ்பித்தனின் பிரியமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!




10 comments:

கலா said...

காதலும்,பாசமும்,அன்பும் கொட்டி
நீங்கள் பதித்த முத்திரைப்
பதிவில்.....
என் அன்புகலந்த வாழ்த்தும்
அதில் சேரட்டும்!!

மோகனன் said...

என்னோடு சேர்ந்து என்னவளை வாழ்த்திய அன்புக் கலாவிற்கு அடியவனின் அன்பு கலந்த நன்றிகள்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

Supra iruku mohanan sir.........

Pathu konjungappu.....

By Bhuvana.

மோகனன் said...

ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்...

நீங்க பாக்கற மாதிரி எல்லாம் கொஞ்ச மாட்டேன் புவனா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

Entha kodai mazhaiku Earpa Sillunu oru Kavithai ketaikuma Mohanan sir....?

மோகனன் said...

கண்டீப்பா கிடைக்கும்..!

Unknown said...

yentha vennilavuku pirantha nallo?

Natu said...

Enna Mohanan sir irukengala, illa kanamal poidingala.....

மோகனன் said...

சித்திரை நிலவுக்குத்தான் பிறந்தநாள்...

வருகைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க புவனா...

இங்கேதான் இருக்கிறேன்...

தாங்கள் இப்படி கேட்கக் காரணம் என்ன?