ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, June 23, 2010

வாழிய செம்மொழித்தமிழ்..!


செந்தமிழ் நாட்டினில் பிறந்ததெனக்குப் பெருமை
பைந்தமிழே தாய்மொழி யானதெனக்குப் பெருமை
தீந்தமிழில் கவி சமைப்பதெனக்குப் பெருமை
பூந்தமிழே நீ பெருமைக்கே பெருமை..!

*********

சங்கம் வளர்த்த தமிழுக்கு இன்று
கொங்கு மண்டலத்தில் திருவிழா..!
தங்கத் தமிழின் பிள்ளைகள் எல்லாம்
மங்காத் தமிழுக்கு எடுக்கும்
பொங்கு தமிழ்த் திருவிழா..!
தாயின் வளத்தை பெருக்கவே
அதன் கிள்ளைகளனைவரும்
ஒன்று சேரும் பெருவிழா..!

*********

எங்களால் நீ வாழவில்லை தமிழ்த்தாயே
உம்மால் நாங்களனைவரும்
வாழ்கிறோம் வளமோடு..!
ஆண்டுகள் செல்லச் செல்ல
வயது கூடி கிழப்பருவம்
எய்வதுதானே இயற்கை..!
இங்கே நீ மட்டும் எப்படி
இயற்கைக்கு எதிர்மறையானாய்..?
உன் கிள்ளைகள் நாங்கள்
கிழப்பருவம் எய்தினாலும்…
எங்களைப் பெற்ற தாயே
நீ மட்டும் எப்படி குன்றா இளமையோடு
குன்றென நிற்கிறாய்..?
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
தாயே உனக்கு இளமைதான்
கூடுகிறதே தவிர…
முதுமை அல்ல…

*********

எங்களின் முதல் மறை நீ..!
எங்களின் மூச்சு நீ..!
எங்களின் சுவாசம் நீ..!
எங்களின் அடையாளம் நீ..!
எங்களின் கலாச்சாரம் நீ..!
எங்களின் பண்பாடு நீ..!
எனக்கு அனைத்தும் நீ..!

உன்னை வாழ்த்த எனக்கு
வயதில்லை என்றாலும்
பெற்ற தாயை பிள்ளை வாழ்த்துவது
பிழையாகாது என்ற நோக்கில்
நீ வாழ்வாங்கு வாழ வேண்டும்..
உம்மோடு சேர்ந்து நாங்களும்..!

வாழிய பைந்தமிழ்…
வாழிய தீந்தமிழ்…
வாழிய பூந்தமிழ்…
வாழிய செந்தமிழ்…
வாழிய செம்மொழித்தமிழ்..!

*********

(இதையும் படிங்க... நான் எழுதியதுதான்....)

செம்மொழிக்கான தகுதிகள் - ஒரு விளக்கம்

தமிழுக்கும் பதினாறு பேறு..!



2 comments:

பழமைபேசி said...

நன்று நண்ப!

மோகனன் said...

நன்றி நண்ப..!

அடிக்கடி (சு)வாசிக்கக வருக..!