ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, April 1, 2010

உன் முகம் காணாத..?


உன் முகம் காணாத
ஒவ்வொரு நாளும்
எனக்கு அமாவாசை போலத்தான்..!
உன் குரல் கேட்காத
ஒவ்வொரு நாளும்
எனக்கு நிசப்த நாள் போலத்தான்..!
உன் குறும்புச் சிரிப்பைக்
காணாத ஒவ்வொரு நாளும்
எனக்கு குறைபட்ட நாள் போலத்தான்..!
போதும் பெண்ணே
என்னை வதைத்தது…
சீக்கிரம் காட்டேன் உன் பூ முகத்தை..!




2 comments:

கலா said...

இதைத்தான்......ரொம்பப்......???
என்று சொல்வார்களா??

ம்ம்ம்ம...நடக்கட்டும்..நடக்கட்டும்!

மோகனன் said...

சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டு விட்டீர்களே..?

என்ன அது என்று தொரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க தோழி..!