ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, April 14, 2010

தமிழ் மேல் தீராக் காதல்..! - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவிதை..!


ஆமென்று சொன்னாலும் போமென்று சொன்னாலும் - தமிழ்ப்
பொல்லாக் காதல் போமோ..? பொல்லாக் காதல் போமோ..?
சர்ரென்று விட்டாலும் விர்ரென்று விட்டாலும் – உன்
அம்பிற்கு  இணையாகுமோ? தமிழ் அம்பிற்கு  இணையாகுமோ?
பசியென்று வந்தாலும்… புசித்து விட்டு வந்தாலும் – உனை
உண்ணாமலிருக்கத் தோணுமோ..? உண்ணாமலிருக்கத் தோணுமோ..?

முகில் நிறை முக்கூடல் நகரான… அகில் நிறை தமிழ்க்கூடல் நகரான
மா மதுரை எனை அழைக்குதோ..? கோ மதுரை எனை அழைக்குதோ..?
ஒரேயொரு பார்வை போதுமே… ஓரேயொருமுறை தரிசனம் போதுமே…
என நான் எண்ணுவது சரியாமோ..? நான் எண்ணுவது சரியாமோ..?
சாஸ்திரங்களற்றவன் நான்… ஆஸ்திகளற்றவன் நானென்று தெரிந்தும்
கனிவாய் அன்பு வைத்ததேனோ..? என்மேல்  அன்பு வைத்ததேனோ..?

கதவடைத்த வீடிற்குள் காற்றானாய்… மதகடைத்த அணைக்குள் நீரானாய்
கதவினை திறப்பது யாராமோ..? தமிழணையினை திறப்பது யாராமோ..?
சங்கம் வளர்த்த தமிழென்றாலும்... சிங்கம் நிகர்த்த தமிழென்றாலும்...
மதுரைத் தமிழுடன் இணையாமோ..? மூதுரைத் தமிழுடன் இணையாமோ..?
பேகன் வளர்த்த முத்தமிழன்றி... மோகனனும் வளர்க்கின்றான்…
பேதை அதில் மூழ்கிப் போகாமோ..? கோதையவள் மூழ்கிப் போகாமோ..?
தீம்பாவை நெஞ்சினிலே வாழும்… பூம்பாவை நெஞ்சினிலே வீழும்…
அத்திருநாளும் விரைந்து வாராதோ..? அத்தமிழன்புக்கு இரையாகாதோ..?



(தமிழின் பால் பேரன்பு கொண்ட உங்களனைவருக்கும்... இச்சிறியவனின் உள்ளம் கனிந்த...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

தமிழின் பால் அன்பு கொண்டு... அவளுக்காக நான் வடித்த தமிழ்க் காதல் கவிதை... பிழையிருப்பின் பொறுத்தருள்வீர்..!)




2 comments:

கலா said...

உங்கள் தமிழ்ப் பற்றுக்கு
என் சிரம் தாழ்த்தல் மோகனன்
மிக நல்ல வரிகள் நன்றி

மோகனன் said...

வருக தோழி..!

தங்களின் வாழ்த்திற்கு என் நன்றிகள் தோழி..!