ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, April 28, 2010

நிலா வீட்டில்..!


‘நீயும் நானும் சேர்ந்து வாழ
ஏற்றதொரு இடம்'
வேண்டுமென்றாய்..!
நம் காதலைப்போல்
அங்கெப்போதும்
பிரகாசம் வேண்டுமென்றாய்..!
இருக்கிறது அப்படி ஓர் இடம்..!
அது இந்திர லோகமல்ல
சந்திர லோகம் என்றேன்..!
'அமாவாசை வருமடா..?
அப்போது என் செய்வாய்
என் அன்பே' என்றாய்..!
அடி அசட்டுப் பெண்ணே...
நிலவிற்கு ஏது…
வளர் பிறை..? தேய் பிறை..?
அது என்றும் முழு நிலவுதான்..!
பூமியிலிருப்பவர்களுக்கு மட்டுமே
அது அமாவாசையாகத் தெரியும்
நாம்தான் நீலா வீட்டில்
வசிக்கப் போகிறோமே…
அதற்கேது அமாவாசை..?




No comments: