ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, November 5, 2009

நீ தொட்டு உயிர்ப்பித்தாய் என்பதற்காக..!



ஒரே ஒருநாள் மட்டும்
உயிர் வாழ்ந்தாலும்...
நீ தொட்டு உயிர்ப்பித்தாய் என்பதற்காக
உனக்காகவே உன் வீட்டு வாசலில்
காத்துக் கிடக்கிறது…
என்னைப் போலவே
நீ இட்ட மாக்கோலமும்..!



4 comments:

சத்ரியன் said...

அழகு...!

மோகனன் said...

வாங்க சத்ரியன்...

நறுக்குத் தெரித்தாற்ப் போல் இருக்கிறது தங்களின் ரசனை மிகுந்த பாராட்டு...

வருகைக்கும், வாசிப்பிற்கும், பின்னூட்டத்திற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...

சே. குமார் said...

மாக்கோலம்... பூக்கோலம்...
ரசித்தேன் நண்பா...
ரொம்ப அருமை..!

மோகனன் said...

அன்பு நண்பா...

உமது வருகையும்.. வாழ்த்தும் எனக்கு புத்துணர்வைத் தருகின்றன...

அடிக்கடி வாங்க...