ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, December 24, 2009

எங்களின் இதயக்கனியே..! - எம்.ஜி.ஆர் நினைவு நாள் கவிதாஞ்சலி


பொன் மனச் செம்மலே!
எங்களின் அண்ணலே..!
புரட்சித் தலைவரே..!
புதுமைப் பித்தரே..!
இந்திரனின் உருவே..!
எங்களின் இதயக்கனியே..!
மக்கள் திலகமே..!
என்றும் மங்காத செல்வமே..!
ஏழைகளின் ஒளிவிளக்கே..!
எங்களின் மணிவிளக்கே..!
நீ மறைந்து இன்றோடு
ஆண்டுகள் இருபத்தி இரண்டு..!

ஆண்டாண்டு காலமாய்
அழுது புரண்டாலும்
மாண்டவர் மீள்வதில்லை..!
நீ மாண்டு போகவில்லை ஐயா
மக்களின் மனங்களில்
குடியிருந்த கோவிலாய்
வாழுகின்றாய்..!
ஒளிவிளக்காய் எங்களுக்கு
வழிகாட்டுகின்றாய்..!

மன்னாதி மன்னா...
நின் மலரடி பணிகின்றோம்..!
நாடோடி மன்னா...
நின் வழி நடக்கின்றோம்..!
மறைந்தும் மறையாத
செல்வமே..
நீ வாழி...
நின் புகழ் வாழி..
வாழி நீ எம்மான்..!



2 comments:

ரமேஷ் said...

மிகவும் நன்றாக உள்ளது.

மோகனன் said...

நன்றி தோழரே...