ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, September 23, 2009

பணம் ஒரு வேசி..!



விடாமல் விரட்டும் வறுமை
மனதில் படரும் வெறுமை
மற்றவர் பார்வையில் சிறுமை
மனம் கேட்கிறது பொறுமை..!

வாய்மையை கடைபிடித்தால்
வருவாய் கிடைக்காது..?
பொய்மையைப் பிடித்தால்..!- அதற்கு
வாய்த்திறமை வேண்டும்..!?

எல்லாம் பொய்யாய்ப்போன உலகில்
பொய்மையைப் பிடியேன்... - ஆனால்
இவ்வுலகில் எல்லாம் பணம்
பணம்... பணம்... பணம்..!

பணம் கிட்டாவிடில்
மனம் ஆகிவிடுகிறது ரணம்...
குணம் குமைந்து சாகிறது
மனம் அழுது தொலைக்கிறது..!

பணம் ஒரு வேசி
பணக்காரனிடம் மட்டும் ஒட்டும் பாசி
அவ்வேசி நம்மிடமிருந்தால்
சமூகம் நம்மை உயரத்தில் வைக்கும்
இல்லாவிடில் குப்பையில் தள்ளும்..!

(சென்னையில் வேலை தேடி.. வேலை தேடி ஓய்ந்து போனேன். காய்ந்து, தீய்ந்தும் போனேன்... அதன் விளைவாக, 17.03.2005 அன்று எழுதியது. இங்கே மீள்பதிவாக...)



2 comments:

நிகழ்காலத்தில்... said...

மீள்பதிவாக இருந்தாலும் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே

வாழ்த்துக்கள்

kindly remove word verification

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள்...

தங்கள் வேண்டுகோளுக்கிணங்க word verification எடுத்தாயிற்று...

அன்புடன்

மோகனன்