ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, November 3, 2009

உன்னைப் போலொரு கவிதையை...



வெற்றுக் காகிதத்தில்
உனைப் பற்றி
ஆயிரம் ஆயிரமாய்
கவிதைகள் வடித்தாலும்
உண்மையில்...
உன்னைப் போலொரு கவிதையை
என்னால் வடிக்க முடியாது
என்பதை
திறந்த மனதோடு
ஒத்துக் கொள்கிறேன்..!



4 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

தபு சங்கர் சாயல் இருக்கிறது தோழரே

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

தபு சங்கர் கவிதைகளை இதுவரை நான் வாசித்ததில்லை... ஒருவேளை அவருடைய ரசனையோடு...என்னுடைய ரசனையும் ஒத்துப் போயிருக்கலாம்...

இதில் என் பிழையில்லை தோழரே...

இருப்பினும் இது போன்ற சாயல்களை தவிர்க்கப் பார்க்கிறேன்...

தங்களின் வருகைக்கும்..மேலான கருத்திற்கும் என் பணிவான நன்றிகள்...

கவி அழகன் said...

காதல் தாகம்

மோகனன் said...

அன்பு நண்பர் கவி இளவலுக்கு.. (கிழவர் என சொல்ல மனமில்லை)

தங்களின் வருகையும்... கருத்தும்.. சேர்க்கையும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன...

அடிக்கடி வாங்க... தாகத்தை தணிச்சுக்கோங்க...

தங்களின் வருகைக்கும்..மேலான கருத்திற்கும் என் பணிவான நன்றிகள்...