ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, December 3, 2009

திறந்து மூடாதே..?



அன்பிற்கினியவளே...
உன் இமைகளை
படபடவென்று திறந்து மூடாதே..?
பட்டாம் பூச்சியோ
எனப் பிடிக்க வருகிறேன்..!
உன் செவ்விழ் அதரங்களைத்
திறந்து மூடாதே..?
கொவ்வைப் பழமோ என
கடிக்க வருகிறேன்..!
உன் இதய வாசலை மட்டும் திறந்து மூடு..!
உள்ளே நானிருக்கிறேன் என்று
இந்த உலகிற்கு தெரியட்டும்..!   



2 comments:

கா.பழனியப்பன் said...

இனிய காதல் கவிதை.
நன்றி

கமலேஷ் said...

நல்ல காதல் கவிதை...