ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 16, 2009

காதலால் பரிதவிக்கிறேனடி..!



ஊருணித் திருவிழாவில்
குழந்தையைத் தொலைத்து விட்டு
பரிதவிக்கும் தாயைப் போல...
அயல் நாட்டில்
பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு
பரிதவிக்கும் தமிழனைப் போல...
என் மனதை உன்னிடம்
தொலைத்து விட்டு பரிதவிக்கிறேனடி…
காதலால் பரிதவிக்கிறேனடி..!



4 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை.

ம்... எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ..?
உங்கள் இதயத்தில் காதல் அருவி கொட்டிக் கொண்டிருக்கிறதோ..!

கலையரசன் said...

எல்லாம் காதல் படுத்தும்பாடு.. பெரும்பாடு...

மோகனன் said...

அன்பின் சிறந்த நண்பர் குமார் அவர்களுக்கு....

தாங்கள் வாழ்த்தும் அளவிற்கு பெரிதாக ஏதும் எழுதிவிடவில்லை...

இதயத்தில் உள்ளதை... இணையத்தில் இணைக்கிறேன்... உங்களைப் போன்ற இதயங்களோடு இணைகிறேன்... அவ்வளவே...

தங்களின் வருகைக்கும்.. வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க கலையரசன்...

என்ன செய்ய... பள்ளி வயதில் பாடம் எழுதச் சொன்னால்கூட அப்படி எழுதியதில்லை...

கன்னியவளை நினைத்ததிலிருந்து கவிதையாக வருகிறது...

இந்த பரிதவிப்பு எல்லோருக்கும் உண்டுதானே கலையரசன்..!


தங்களின் வருகைக்கும்.. வளமையான கருத்திற்கும் மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!