ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, March 31, 2010

புயலென்று சொன்னாலும்..!


புயலென்று சொன்னாலும்
நீயென்று சொன்னாலும்
இரண்டும் ஓன்றுதான்..!
'தென்றலல்ல அவள்' என்று
உன்னைப் பற்றி
உன் உறவுகள் சொல்லக்
கேட்டிருக்கிறேன்..!
அப்ப்போதெல்லாம் அதை
நம்பாத நான்
உனை நேரில் சந்தித்த பின்
நம்பத் தொடங்கினேன்..!
நீ வெறும் புயலல்ல..?
பேரழகுப் புயலென்று..!



4 comments:

மதுரை சரவணன் said...

/நீ வெறும் புயலல்ல..?
பேரழகுப் புயலென்று..! /அருமை. வாழ்த்துக்கள்

மோகனன் said...

வாங்க தோழரே..!

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி..!


அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

ஓஓஓஓ.... பேர் அழகா?

அப்படியென்ன அழகான பேர்?

மோகனன் said...

அன்பான தோழிக்கு...

பேரழகு என குறிப்பிட்டது... அவள் அழகிற்கெல்லாம் அழகு என்றேன்...

சரி.. உங்கள் வாதத்திற்கும் வருகிறேன்... என்னவள் பெயர் யாழினி! இந்த பேர் அழகில்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்..!

தமிழ் கூறும் நல்லுலகம் அப்படிச் சொன்னால் இனி கவிதை எழுதுவதையே விட்டு விடுகிறேன்..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!