ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 28, 2009

உலகின் மிகச் சிறந்த சிற்பிகள்..!



இந்த உலகின்
மிகச்சிறந்த
சிற்பிகள் யார்..?
என்று போட்டி வைத்தால்
முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்
பெண்ணே..!



4 comments:

க.பாலாசி said...

//முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்//

நானும் இப்டித்தான் சொன்னேன். ஆனா அவ ஒத்துக்க மாட்றா.

என்னை சிற்பமா ரசித்த
நீதான்
சிற்பி
என்கிறாள்.

கவிதை சிற்பமாய்.

மோகனன் said...

வாங்க பாலாசி...

சிற்பமே சொல்லி விட்டால்... அங்கு மறுப்பதற்கு இடமேது... ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்...

(ஆனால் ஒன்று சிற்பத்தை ரசிப்பவன் எல்லாம் சிறபி அல்ல... அதை நுடபமாக உருவாக்குபவனே சிற்பி... இதையெல்லாம் அங்க போய் சொல்லி வைக்காதீங்க... சிற்பம் அப்புறம் காளி சிற்பமாயிடப் போகுது...)

வருகைக்கும், கருத்துரைக்கும் பணிவான நன்றிகள் க. பாலாசி(ங்கம்)

தேவன் மாயம் said...

நல்லாயிருக்கு! கவிதையை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாமே!

மோகனன் said...

வாங்க நண்பரே..

நெடு நாட்களுக்குப் பிறகு மீண்டு(ம்) வந்திருக்கிறீர்...

நறுக்குத் தெறித்தாற் போல வந்துவிட்டது...

ஆகட்டும் இனி வரும் கவிதைகளையாவது நீட்டிக்கப் பார்க்கிறேன்...

(எனக்கென்னவோ இழுத்திருக்கலாம் என்ற சொல்லை விட நீட்டித்திருக்கலாம் என்ற சொல் நியாயமாகப் படுகிறது நண்பரே..)

வருகைக்கும்... பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்...